மிளகாய்ப் பொடி தூவி கார் கடத்தல்
டெல்லி நொய்டாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான டாடா ஹாரியர் காரை இளைஞர்கள் திருடிச் சென்றனர். பணம் தருவதாக கூறி நான்கு இளைஞர்களை காரில் ஏற டிரைவர் அனுமதித்தார். நொய்டாவில் இருந்து டெல்லி செல்லும் பயணத்தின் போது இளைஞர்கள் டிரைவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்கினர். பின்னர் ஹரியானாவில் உள்ள குருகிராம் சென்றடைந்ததும் வாகனத்தை அங்கேயே கைவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை நொய்டா போலீசார் கைது செய்தனர். கார் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
Tags :