தந்தையை கொன்ற வங்கதேச நபருக்கு மரண தண்டனை

by Staff / 31-08-2023 03:29:17pm
தந்தையை கொன்ற வங்கதேச நபருக்கு மரண தண்டனை

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற வங்கதேச பிரஜைக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வங்கதேச குடிமகன் ஷாஹின் மியா தனது தந்தையை கொன்ற குற்றத்திற்காக சவுதி உள்துறை அமைச்சகத்தால் தூக்கிலிடப்பட்டார். அவரது தந்தை அயூப் அலியைக் கொன்ற பிறகு, அவரது உடலை ஷாஹின் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் கீழ் புதைத்தார். போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளியை போலீசார் கைது செய்ததுடன் விசாரணையில் அவர் குற்றத்தை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சவுதி ராயல் கோர்ட் உத்தரவின் படி, தூக்கிலிடப்பட்டார். மோகன்லாலின் 'திரிஷ்யம்' பட பாணியில் உடலை குற்றவாளி புதைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via