வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 31-08-2023 02:35:52pm
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மத்திய அரசு குற்றவியல் சட்டங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களில் இந்தி வார்த்தைகள் மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளை திணிக்க முயன்று வருகிறது இதற்கு தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களிள் ஈடுபட்டு வருகின்றனர் தூத்துக்குடியில் மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத தினிப்பை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

 

Tags :

Share via