ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடரும் தீக்குளிப்பு முயற்சி

by Editor / 22-11-2021 03:24:44pm
ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடரும் தீக்குளிப்பு முயற்சி


நெல்லைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணகுடி அருகிலுள்ள பாவூர் கன்னங்குளம் பகுதியை இருந்த செல்வகுமார் என்பவர் வீட்டில் 20 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை தாமதம் செய்து வருவதை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன்  தீக்குளிக்க முயற்சி.தற்கொலை செய்ய முயற்சி.

 கொக்காங்காடு பகுதியை சேர்ந்த குமார் தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் பாத்தியம் இருந்தும், சாதி பாகுபாடு காரணமாக அதேபகுதியை சேர்ந்த தங்கவேலு, கொக்கடிவேலு ஆகியோர் எதிர்ப்பதாக குற்றச்சாட்டு.
முதலமைச்சர் மற்றும் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை.தனது தாய் மாரியம்மாள், மகன் தரணீஷ், மகள் தர்சினி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி. போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை.

 

Tags :

Share via