ஜெயக்குமார் மரணம்: திணறும் காவலர்கள்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் எந்த தடயமும் சிக்கவில்லை. இந்த நிலையில் ஜெயக்குமார் இல்லம் அமைந்துள்ள கரை சுத்து புதூர் கிராமத்தைச் சுற்றி 10 கி.மீ தொலைவில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். ஜெயக்குமார் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படுவதற்கு முன்பாக வந்த தொலைபேசி எண்களையும், கரை சுத்து புதூருக்கு 10 நாட்களுக்கு முன்பு வந்து சென்ற வாகனங்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
Tags :