வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 07-05-2023 05:33:10pm
வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள பின்னமரத்து பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் மகன் பரணி வயது 23, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டு தற்பொழுது ஊர் திரும்பி உள்ளார்.  ஊர் திரும்பி வந்த வாலிபர் பரணி வெளிநாட்டில் இரண்டு வருடமாக பணம் சம்பாதிக்க முடியவில்லையே என மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கபிஸ்தலம்  காவிரி படுகை பகுதியில் உள்ள வயலில் தேக்கு மரத்தில் தூக்கிட்டு யிரிழந்தார் 
இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு உடனடியாக கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வந்த கபிஸ்தலம் போலீசார் தூக்கிட்டு இறந்த வாலிபர் பரணியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இறந்த வாலிபர் பரணியின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், , ,

 

Tags :

Share via