சொத்துக் குவிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் விஜயபாஸ்கர் மனு
முனனாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். எங்களை ,இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்று விஜயபாஸ்கர் மனு அளித்தார். இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Tags :