பிர்பும் அருகே 40 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார்

by Staff / 27-03-2022 05:03:49pm
பிர்பும் அருகே  40 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார்

மேற்குவங்கம் பிர்பும் பூமில் 8 பேரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த ராம்புர்  ஹாட் கிராமம் அருகே 40 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றியதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

ரம்புர் ஹாட்  கிராமம் அருகே கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்கள் குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்த கிராமத்தில் அண்டையில் நாட்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றியதும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்த சமூகவிரோதிகள் திட்டமிட்டு இருந்தனர் என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via