காதலனின் வீட்டை தீக்கிரையாக்கிய பெண்
தாய்லாந்தின் பட்டாயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காதலன் தன்னை ஏமாற்றிய விரக்தியில் குடித்துவிட்டு காதலனின் வீட்டிற்கு வந்த காதலி அவரது வீட்டுக்கு தீ வைத்தார். தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அருகில் உள்ள மற்ற குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண் தானே தீ வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். காதலனும் இளம்பெண்ணுக்கு எதிராக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
தோன்லயா நளீ என்ற 25 வயது பெண் தனது காதலனை பழிவாங்குவதற்காக அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளார். குடிபோதையில் தனது காதலனின் அபார்ட்மெண்டிற்கு வந்த அந்த பெண் முதலில் அவனது படுக்கையறைக்கு தீ வைத்துள்ளார். தீ வேகமாக பரவி சிறிது நேரத்தில் குடியிருப்பு முழுவதும் பற்றி எரிந்தது. அப்போதுதான் இது அருகில் வசிப்பவர்களின் கவனத்துக்கு வந்தது. தீ மளமளவென மற்ற குடியிருப்புகளுக்கும் பரவியதால், அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இறுதியாக, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர்.
Tags :