சாலை மறியலில் ஈடுப்பட்ட ஆட்டோ டிரைவர்

by Staff / 01-12-2022 12:48:36pm
சாலை மறியலில் ஈடுப்பட்ட ஆட்டோ டிரைவர்


சென்னை, போரூர் ஏரி சந்திப்பு அருகே, பெண் பயணியுடன் வந்த ஆட்டோவை, காவல் உதவி ஆய்வாளர் ராஜன் தடுத்து நிறுத்தியுள்ளார். வாகன நெரிசலை ஏற்படுத்தும் விதமாக வந்ததாக கூறிப் ஆட்டோவை புகைப்படம் எடுத்துள்ளார். பதிலுக்கு ஆட்டோ ஓட்டுனர், காவல் உதவி ஆய்வாளரை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுனர் திடீரென சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து போலீசாரும் அவரை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து இருவரும் சமாதானமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories