அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது, தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்ற நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
Tags :