கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

by Editor / 04-05-2024 10:43:05pm
கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் இன்று கைது செய்யப்பட்டார்.

தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். கோவைக்கு அழைத்து செல்லும்போது தாராபுரம் அருகே போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அதேவாகனத்தில் சவுக்குசங்கர் கோவை அழைத்து செல்லப்பட்டு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.அப்போது சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

Share via