ஆயிரத்தில் ஒருத்தி லட்சுமி..

by Editor / 01-12-2022 11:36:06pm
ஆயிரத்தில் ஒருத்தி லட்சுமி..

புதுச்சேரியில் நேற்று உயிரிழந்த கோயில் யானை லட்சுமியின் உடலில் இருந்து பிரேத பரிசோதனையின்போது இதயம், ஈரல், நுரையீரல், தும்பிக்கை பகுதிகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை காப்பாளர் வஞ்சுளவள்ளி தெரிவித்துள்ளார். மாதிரிகளை ஆய்வு செய்து 10 அல்லது 15 நாட்களில் அறிக்கை கொடுக்கப்படும். அதில் முழு விவரம் தெரியவரும். யானை உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மாரடைப்பு காரணமாகதான் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. பெண் யானைக்கு தந்தம் வளர்வது அரிது.தந்தம் புதுச்சேரி வனத்துறையிடம் உள்ளது. ஆயிரத்தில் ஒரு பெண் யானைக்கு மட்டும்தான் இது போன்று தந்தம்  வரும் என கூறியுள்ளது..தந்தம் ஆய்வுகளுக்கு பின் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via