அ.தி.மு.க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

by Admin / 06-12-2022 11:07:07am
அ.தி.மு.க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை


அ.தி.மு.க பொதுக்குழு ஜீலை 11 ல் நடந்தது.இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப் பட்டார் .அதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க அதற்கான வேலை களில் இறங்கினர்.இதனை எதிர்த்து ஒ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்காலத்தடை பெற்றனர்.இந்நிலையில்,எடப்பாடி தரப்பு கட்சியின்  செயல்பாடுகள்,வளர்ச்சி பாதிக்கப்படுவதால் விரைந்து விசாரணை நடத்தக்கேட்டுக் கொண்டனர்.இவ்வழக்கு  விசாரணை இன்று உச்ச நீதி மன்றத்தில் நடக்க உள்ளது.

 

Tags :

Share via