நடுவழியில் நின்ற திருநெல்வேலி -தாம்பரம் வாராந்திர ரயில்

by Editor / 11-12-2022 11:41:21pm
நடுவழியில் நின்ற திருநெல்வேலி -தாம்பரம் வாராந்திர  ரயில்

திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் ( எண் 06004) திருநெல்வேலியில் இருந்து இந்த செப்டம்பர் 18 ரயில் முதல் ஜனவரி 29 வரை ஞாயிற்றுக்கிழமைகளில்  இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில் இன்று வழக்கம் போல  சேரன்மகாதேவி, அம்பாசமுத் திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, வழியாக ராஜபாளையம் கடந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மின்சாரரயில்பாதை அமைக்கும்பணிகள் நடந்துவரும் நிலையில்  தேவையான வயர்கள் பொருத்தும் பணிகள் நடந்துவருகின்றன.இந்த நிலையில் மின்பாதையில் உள்ள மின் விநியோகம் இல்லாத வயர்கள் ரயிலின் எஞ்சினில் சிக்கியதால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து வயர்களை அகற்றும்  பணிகள் நடந்துவருகின்றன.இதன் காரணமாக ரயிலில் உள்ள பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் சிரத்திற்குள்ளாகியுள்ளனர்.

நடுவழியில் நின்ற திருநெல்வேலி -தாம்பரம் வாராந்திர  ரயில்
 

Tags :

Share via