7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

by Staff / 12-12-2022 11:50:55am
 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் டிசம்பர் 15ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய மாண்டஸ் புயல் எதிரொலியால் கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரையிலான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via