300-ரூபாய்க்காக தம்பியை கொன்ற அண்ணன்

by Staff / 17-12-2022 12:35:30pm
300-ரூபாய்க்காக தம்பியை கொன்ற அண்ணன்

மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ரூ.300 பணத்துக்காக இரு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரமேஷ் ககோடியா என்ற நபர் தனது சகோதரர் சுமன் சிங் ககோடியாவின் மனைவிக்கு ரூ.300 கடனாக கொடுத்துள்ளார். இந்த பணம் தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், குழாயால் சுமனின் தலையில் அடித்தார்.இதில் சுமன் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். சண்டையின் போது சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அண்ணனை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via