சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் வெள்ளம்
கேரளாவில் சபரிமலை ஐயப்பசுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இம்மாதம் 11ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாகவும், 12ம் தேதி அதிகபட்சமாக 1.07 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்ட நெரிசலினால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல்-மகரவிளக்கு விழாவையொட்டி, கோயிலின் ஆன்லைன் பதிவு நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :