நானும் ரௌடி தான் என்று ஓ. பி. எஸ் பேசி வருகிறார். ; கடம்பூர் ராஜூ

by Staff / 22-12-2022 04:58:41pm
நானும் ரௌடி தான் என்று ஓ. பி. எஸ் பேசி வருகிறார். ; கடம்பூர் ராஜூ


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாங்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை. ஏமாற்றித்தின் வெளிப்படாக தான் ஓ. பி. எஸ் பேசியுள்ளார். ஓ. பி. எஸ். இருக்கும் போது உள்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அந்த அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்டு தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளதுஎன்றும், அந்த பொதுக்குழுவில் வைக்கப்பட்ட வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கட்சி மற்றும் சின்னம் ஆகியவை ஈ. பி. எஸ் இடம் தான் உள்ளது. தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஓ. பி. எஸ்க்கு தான் உள்ளது. அவர் வேண்டும் என்றால் தனிக்கட்சி ஆரம்பித்துக்கொள்ளட்டும் என்றும், அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியில் உள்ளது. அதிமுக ஈ. பி. எஸ். இடம் தான் உள்ளது. நானும் ரௌடி தான் என்று வடிவேல் சொன்ன மாதிரி பாஜக தனக்கு மரியாதை தருகிறது என்று ஓ. பி. எஸ். கூறிவருகிறார். ஓ. பி. எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவர் டிடிவி, சசிகலா என யாரூடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் அது அவரது விருப்பம் என்றும், என்றைக்கும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், துரை வைகோ அரசியலில் கத்துக்குட்டி என்றும் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார

 

Tags :

Share via