இன்றும், நாளையும் ரயில் போக்குவரத்து ரத்து

by Staff / 24-12-2022 11:57:47am
இன்றும், நாளையும் ரயில் போக்குவரத்து ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து சனி, ஞாயிறு (டிச. 24, 25) ஆகிய இரு நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதுதொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையிலிருந்து சனிக்கிழமை புறப்பட வேண்டிய ராமேசுவரம் விரைவு ரயில், சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

டிச. 24, 25 ஆகிய இரு நாட்களும் திருச்சி - ராமேசுவரம்- திருச்சி, மதுரை - ராமேசுவரம்- மதுரை தடத்திலான அனைத்து விரைவு ரயில்களும், இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். அதேபோல, இத்தடத்திலான வாராந்திர விரைவு ரயில்கள் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும், பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம், மண்டபம் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் உதவி மையத்தை 93605 48465 என்ற எண்ணிலும், மண்டபம் உதவி மையத்தை 93605 44307 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via