அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

by Staff / 24-12-2022 02:01:50pm
அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே கரூர் கிழக்கு மாவட்டம் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் டாக்டர் கதிரேசன் தலைமையில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வின் போது மாவட்ட பிரதிநிதி பழனியம்மாள், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் அருண்மொழிதேவன், நகர பொருளாளர் எம். ஜி. ஆர் சீனிவாசன், குளித்தலை ஒன்றிய அவைத்தலைவர் மோகன், துணைச்செயலாளர் குமார், பொருளாளர் புகழேந்தி, வினோத், பண்ணை ராஜேஷ், துணைச் செயலாளர் விஜயகுமாரி, தாளியாம்பட்டி சந்தோஷ், முகிலன், ஜீவா, கௌதமன், பாலமுருகன், லோகு, மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிறகு அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via