குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்,பழையகுற்றால அருவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட உடும்பு.

by Editor / 27-12-2022 03:01:24pm
 குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்,பழையகுற்றால அருவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட உடும்பு.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 26 ஆம் தேதியான நேற்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மேலும் அருவிகளின் நகரம் என போற்றப்படும் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்டு அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து இரண்டாவது நாளாக இன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குற்றாலம் மெயின் அருவிலும், பழையகுற்றாலம் அருவியிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகி உள்ளது. மேலும் பழைய குற்றாலம் அருவி நீரில் வனப்பகுதியில் இருந்து ஊர்வன வகையைச் சேர்ந்த உடும்பு வெள்ளத்தில் அடித்து விடப்பட்டுள்ளது. அதை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை ஊழியர் உடும்பை பத்திரமாக மீட்டார் மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதியிலிருந்து ஏராளமான ஊர்வன  வகையைச் சார்ந்த மலைப்பாம்பு, உடும்பு உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படுகின்றன, குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி முதல் பாலத்தை ஒட்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகின்றது.

 குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்,பழையகுற்றால அருவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட உடும்பு.
 

Tags :

Share via