புளியங்குடியில் ரூ.8 லட்சம் குட்கா புகையிலை பொருட்கள், வாகனம் பறிமுதல்; 5 பேர் கைது

by Editor / 03-08-2021 10:34:02am
புளியங்குடியில் ரூ.8 லட்சம் குட்கா புகையிலை பொருட்கள், வாகனம் பறிமுதல்; 5 பேர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள முள்ளிகுளத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் தடைசெய்யப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதனை தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணையில் சேலத்தில் இருந்து லாரி மூலம் கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர் இதுதொடர்பாக வியாபாரி செங்கான்(50), கடையநல்லூரை சேர்ந்த முத்துக்குமார்(32), துரை(42), சேலத்தைச் சேர்ந்த நடராஜன்(45) மற்றும் கோவிந்தராஜ் ஆகிய ஐந்து பேரையும்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  புகையிலை பொருட்கள் புகையிலை பொருட்கள் வாங்க கொண்டுவந்த ரொக்கமாக ரூபாய் 12 லட்சம் ,மாருதி வேன் ,ஆட்டோ  மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்தபோலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் 

 

Tags :

Share via