போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் 36 பேர் கைது..

by Staff / 17-10-2023 12:27:15pm
போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் 36 பேர் கைது..

மதுரை நகரில் தெப்பக்குளம், ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திடீர்நகர், சுப்பிரமணியபுரம் எஸ். எஸ். காலனி, செல்லூர் திலகர்திடல்காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகு தியில் சட்டவிரோதமாக கஞ்சாவும், மது பாட்டில் களை பதுக்கி வைத்தும் சிலர் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்தந்த காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கினர். அப்போது கஞ்சா விற்பனை செய்த 24 பேரை கைது செய்து பணம் ரூபாய் 13ஆயிரத்து தொள்ளாயிரமும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் விற்பனை செய்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.இவர்களை போல் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 12 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 191 பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மதுரையில் ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா மது விற்பனை செய்த மொத்தம் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.இது போல் நடவடிக்கை தொடரும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via