லாரியில் தீ விபத்து.. 4 பேர் பலி

by Staff / 17-10-2023 12:21:14pm
லாரியில் தீ விபத்து..  4 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில், சுவாமி நாராயண கோவில் அருகே, லாரி பிரேக் பழுதானதால், முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மோதியது. இதில், லாரியின் முன்பகுதி வெடித்து முற்றிலும் நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via