ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது -டிராக்டர் பறிமுதல்.

by Editor / 23-02-2023 11:09:36pm
ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது -டிராக்டர் பறிமுதல்.

விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரசோலை தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று (22.02.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமீன் செங்கல்படை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான காத்தமுத்து மகன் சண்முகராஜ் (52), ராமசாமி மகன் கருப்பசாமி (37) மற்றும் குருசாமி மகன் மணிகண்டன் (25) ஆகியோர் சட்டவிரோதமாக டிராக்டரில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக மேற்படி போலீசார் எதிரிகளான சண்முகராஜ், கருப்பசாமி மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ¾ யூனிட் ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது -டிராக்டர் பறிமுதல்.
 

Tags :

Share via