பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 28-12-2022 02:47:07pm
பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் ஜூன் 18, 1923 இல் பிறந்த நிலையில், சமீபத்தில் 100வது வயதை நிறைவு செய்தார். இதையொட்டி மோடி தனது தாயாரிடம் சென்று ஆசி பெற்றார்.தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அகமதாபாத்தில் உள்ள அசர்வா எம்எல்ஏ தர்ஷனாபென் வகேலா மற்றும் தர்யாபூர் எம்எல்ஏ கவுசிக் ஜெயின் ஆகியோர் மேத்தா மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். முதல்வர் பூபேந்திர படேலும் மருத்துவமனைக்கு வருகிறார்.ஹீராபென் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் அகமதாபாத் சென்றடைகிறார்.

 

Tags :

Share via