டெல்லியில் அமித்ஷாவுடன்  எடப்பாடி, ஓ.பி.எஸ். சந்திப்பு

by Editor / 27-07-2021 05:36:42pm
டெல்லியில் அமித்ஷாவுடன்  எடப்பாடி, ஓ.பி.எஸ். சந்திப்பு

 


பார்லிமென்ட் வளாகத்தில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அ. தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர். 


அண்ணா தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி வந்தனர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த இருவரும், நேற்று காலையில் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்தச் சந்திப்பில் தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில், இன்று காலை 11.20 மணிக்கு பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்தனர்.

தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் போது, தம்பிதுரை, ரவீந்தரநாத், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அரசியல் சார்ந்த எந்த விஷயமும் பேசவில்லை என்று இந்த சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். பிரதமரை சந்தித்த போது என்ன விஷயம் பேசினேன் என்பதை  விவரமாக சொல்லி விட்டேன் என்று எடப்பாடி நிருபர்களிடம் கூறினார்.

 

Tags :

Share via