. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் மின்துறைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு.

by Editor / 04-11-2023 08:34:40pm
. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் மின்துறைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு.

தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் பணியில் இருக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அலுவலர்கள் செல்போன்களை தொடர்புகொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

 

Tags : . வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் மின்துறைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு.

Share via