கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

by Staff / 29-12-2022 03:53:42pm
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

கோவை மாவட்டம் காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரமூர்த்தி, இவருக்கு நேற்று காந்திபுரம் அடுத்த லஜபதி ராய் வீதி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது கன்னியாகுமரியை சேர்ந்த 20 வயதான மார்பின் தாமஸ் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்த காவல்துறையினர், மார்பின் தாமசை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via