கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தற்கொலை

by Staff / 29-12-2022 04:01:39pm
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தற்கொலை

கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான வடமாநில நபர், இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றது, இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கோவை வந்து பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிக்கன் கடையில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார், மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது, மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஏற்பட்டு வந்துள்ளார், மேலும் தனது மனைவியின் நடத்தையின் மீது இவருக்கு சந்தேகம் அடைந்துள்ளார், இதன் ஒரு பகுதியாக நேற்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியின் நடத்தையில் சந்தேகபட்டு மனைவியை திட்டியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த இவரது மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார், அதனால் வாழ்க்கையில் மேலும் விரக்தி அடைந்த 35 வயதான கணவர், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார், சிறிது நேரம் கழித்து, தனது மனைவிக்கு அலைபேசியில் அழைத்து, தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார், உடனடியாக வீட்டிற்கு மீண்டும் வந்த இவரது மனைவி மயங்கிய நிலையில் கிடந்த கணவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via