செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு

by Staff / 15-04-2024 03:50:06pm
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 32வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார்.

 

Tags :

Share via