தொண்டர்கள் மீட்பு, நிவாரண பணியில் ஈடுபட வேண்டும் : ராகுல்காந்தி

by Staff / 05-12-2023 03:32:34pm
தொண்டர்கள் மீட்பு, நிவாரண பணியில் ஈடுபட வேண்டும் : ராகுல்காந்தி

காங்கிரஸ் தொண்டர்கள், புயலால் பாதிப்படைந்த பகுதியில் மாநில அரசுடன் சேர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்ட ராகுல்காந்தி, தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியுள்ள அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளை கேட்டு வேதனை அடைந்தேன். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினரும் செயல்பட வேண்டும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via