ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு தேர்வு
பாகிஸ்தான் அரசு சமீபத்தில் 1,667 கான்ஸ்டபிள் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 32 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எழுத்துத்தேர்வு நடத்த அதிக செலவு ஆவதால், அந்த செலவை அரசால் தாங்க முடியாமல் அதிகாரிகள் புதுமையான முடிவை எடுத்துள்ளனர். அனைத்து விண்ணப்பதாரர்களும் இஸ்லாமாபாத்தில் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மைதானத்திலும் பார்வையாளர்கள் கேலரியிலும் அமர்ந்து சோதனை நடத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
Tags :