பஞ்சாபில் 12 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகுவார்கள் - காங்கிரஸ்
பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் 12 எம்எல்ஏக்கள் கட்சியுடன் உடன்படவில்லை என்றும், வேறு அரசியல் வழிகளைத் தேடுவதாகவும் காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை மறைக்கவும், கட்சிக்குள் நிலவும் உள்கட்சி பூசல்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் ஆம் ஆத்மி கட்சி ‘ஆபரேஷன் தாமரை’ குற்றச்சாட்டை எழுப்புகிறது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
அதிருப்தி எம்எல்ஏக்களில் 9 பேர் காங்கிரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், மூன்று பேர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் கூறியுள்ளார்.
Tags :