சாலை விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி பலி

by Staff / 23-05-2023 04:57:19pm
சாலை விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்ட காவல்துறையினர் சிந்தகேதராஜா கிராம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via