ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு அண்ணனை தம்பி வெட்டி கொலை

by Staff / 02-04-2023 04:28:22pm
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு அண்ணனை தம்பி வெட்டி கொலை

தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்ல தம்பி இவர் இரண்டு லாரி வைத்து தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் சுமார் 50 லட்ச ரூபாய் தொழிலில் நஷ்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.இதனால் கடனை அடைப்பதற்காக தனது பூர்விக வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது தம்பி முத்துராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அண்ணன் நல்ல தம்பியை தம்பி முத்துராஜ் மற்றும் உறவினர் முத்துராஜ் ஆகியோர் காரில் கிராமத்திற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என நல்ல தம்பியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது அப்போது இருவருக்கும் தகராறு ஏற்படவே காரில் இருந்த நல்லதம்பி காரில் இருந்து பண்டாரம் பட்டி காட்டுப்பகுதியில் தப்பி ஓட முயன்றுள்ளார் அப்போது விரட்டி சென்ற தம்பி முத்துராஜ் மற்றும் உறவினர் இருவரும் சேர்ந்து தலையில் கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர் இதில் தப்பி சென்ற தம்பி முத்துராஜ் உறவினரான மற்றொரு முத்துராஜ் ஆகிய இருவரையும் புதிய முத்தூர் போலீசார் கைது செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அங்கு போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் நல்லதம்பி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது

 

Tags :

Share via