ரம்மி தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

by Staff / 09-01-2023 01:06:54pm
ரம்மி தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய அவர், "ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்தை புரியாமல் ஆளுநர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக இது போன்று எந்த ஆளுநரும் செயல்பட்டதில்லை." இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via