திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய பாவேந்தர் - ஸ்டாலின்
பாரதிதாசனின் 133 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே, பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுதிறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்!' எனத் தெரிவித்துள்ளார்.
Tags :