ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், மகன்

by Staff / 20-08-2023 01:31:19pm
ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், மகன்

மதுரவாயல் அடுத்த புளியம்பேட்டைச் சேர்ந்தவர் ஹரி, 46. இவர், லாரி ஓட்டுனராக பணி செய்து வருகிறார்.
இவரது மனைவி செல்வி, 38. இவர்களது மகன் பூவரசன், 23. இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஹரி நேற்று முன்தினம் பணிக்கு  சென்று விட்டார். இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டில் இருந்து முனங்கல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, தாய் மற்றும் மகன் தலையில், இரும்பு ராடால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து மயங்கி கிடப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பூவரசன், நேற்று மாலை உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வி, என் மகனை நான் தான் அடித்தேன்' எனக் கூறியுள்ளார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via