அனல் மின் நிலைய சாம்பல் கடல் வளம் அழிந்து வருகிறது

by Staff / 09-01-2023 03:18:34pm
அனல் மின் நிலைய சாம்பல் கடல் வளம் அழிந்து வருகிறது

தூத்துக்குடி அனல் மின் நிலையம் மூலமாக வரும் சாம்பல் கழிவு கடல் வளத்தை முழுமையாக அழித்து வருகிறது. இதுக்குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில் அதற்கான நடவடிக்கைகளை இன்னும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.இந்த சாம்பல் கழிவின் மூலமாக கடல் வளத்தினை அழித்து வருகிறது மேலும் கடல் மட்டம் 12 அடி மட்டும் உயர்ந்து வருகிறது இதனால் கடல் தொழிலை நம்பி வாழும் அன்றாட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் இதற்கான மாற்று வழியை ஏற்பாடு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via