உறைந்த அருவி நீர்
வட இந்தியாவில் சில நாட்களாக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இமயமலைக்கு அருகில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் நிலைமை கடும் மோசமாக உள்ளது. வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைந்துள்ளதால், தண்ணீர் உறைந்து காணப்படுகிறது. ஹிமாச்சல் மாநிலம் குளுவில் உள்ள நீர்வீழ்ச்சியில் நீர் உறைந்துள்ளது. உறைந்து கிடக்கும் அருவியின் அழகை காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Tags :