திருநங்கை வெட்டி கொலை

by Staff / 31-01-2024 02:48:44pm
திருநங்கை வெட்டி கொலை

கோவை வடவள்ளியில் இருந்து மருதமலை ரோடு செல்லும் பகுதியிலே இந்திரா நகர் உள்ளது. இங்கு மாசி என்கிற திருநங்கை, அவரின் ஆண் நண்பர் மணியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், குன்னூரை சேர்ந்த மென்பொறியாளரான திருநங்கை தனலட்சுமி (வயது 39) என்பவருக்கு மாசியுடன் பழக்கம் ஏற்பட்டது.
தனலட்சுமி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் அனாலிஸ்டாக பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றன. இந்த நிலையிலே, மாசியுடன் தனலட்சுமிக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக மாசியுடன் ஒரே வீட்டில் தனலட்சுமியும் வசித்து வந்து உள்ளார்.இந்த நிலையில், மர்ம நபர்கள் தனலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர தெற்கு துணை ஆணையாளர் சரவணகுமார், உதவி ஆணையர் ரவிகுமார் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் இந்திராநகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து தனலட்சுமியை யார், எதற்காக கொலை செய்தார்கள்? முன் விரோதம் காரணமா? வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் திருநங்கை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via