தேசியக் கொடியை வைத்து சுத்தம் செய்த ஊழியர்
தேசிய கொடியால் மேஜையை சுத்தம் செய்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் சிம்லி கிராமத்தைச் சேர்ந்த செயல் அலுவலர் பிரசாந்த் குமார் என்பவர் அலுவலகத்துக்கு வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது, மேஜை, நாற்காலிகள் தூசி படிந்து இருந்ததால், மூவர்ணக் கொடியை வைத்து சுத்தம் செய்தார். இதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாக பரவியது. தேசிய கொடியை அவமதித்ததாக அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags :