ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்

by Staff / 16-01-2023 01:34:49pm
ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்

கோவை மாநகராட்சி சரவணம்பட்டி சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நிலையில், சாலை விரிவாக்க பணி தொடங்கியுள்ளது. இதில் தற்போது சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் இருந்த 62 கடைகள் அகற்றப்பட்டது, மாநகராட்சி வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் விமலா இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via