வேலை இல்லாமல் தவித்து வந்த நபர் தற்கொலை

by Staff / 17-01-2023 05:31:08pm
வேலை இல்லாமல் தவித்து வந்த நபர் தற்கொலை

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம் அடுத்த ஜோதி நகர், பகுதியை சேர்ந்தவர், அண்ட்ரோஸ் என்கிற ரோஸ், இவரது மனைவி, 43 வயதான எஸ்தர், அண்ட்ரோஸ் என்கிற ரோஸ்க்கு, மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது, மேலும் அவருக்கு, சரியான வேலை இல்லாமல் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார், மேலும் தனக்குச் சரியான வேலை இல்லாததை, நினைத்து, தனது நண்பர்களிடம், அடிக்கடி புலம்பி வந்துள்ளார், இந்த நிலையில், கடந்த 14 ம்தேதி, எஸ்தர், தனது மகளுடன் சென்னையில் உள்ள மருமகன் வீட்டிற்குச் சென்றார், இந்த நிலையில், நேற்று முன்தினம், 15ம்தேதி தனியாக வீட்டில், இருந்த அண்ட்ரோஸ் என்கிற ரோஸ், வாழ்க்கையில் விரக்தியடைந்து தனது லுங்கியை பயன்படுத்தி மின்விசிறியில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட எஸ்தரின் பக்கத்துவீட்டில் வசிக்கும் மோகன், எஸ்தரை அலைபேசியில், அழைத்து, உங்களது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தார், தகவலின் அடிப்படையில் உடனடியாக கோவை வந்த எஸ்தர் இதுகுறித்து நேற்று பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via