தென்காசி மாவட்டத்தில் இரட்டைக்கொலை 

by Editor / 18-01-2023 08:50:56pm
தென்காசி மாவட்டத்தில் இரட்டைக்கொலை 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிச்சுமணி தேவர் மகன் ஐயப்பன் பகுதியைச் சேர்ந்த தேவர் விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவர்களுக்கு இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகின்றது இந்த நிலையில் இவர்களுக்கு நிலம் தொடர்பானமுன்விரோதம்  இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை ஐயப்பனை செல்லத்துரை  வெட்டியுள்ளார். செல்லத்துரை ஐயப்பனை வெட்டியுள்ளார். இருவரும் மாறி..மாறி வெட்டவே..இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக ஐயப்பனின் மகன் கருப்பசாமி என்பவர்  அந்த பகுதிக்கு வந்து செல்ல துரையை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.இதில் செல்லத்துரை இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஐயப்பன் மகன் கருப்பசாமி என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இரண்டு நபர்களின்  உடல்களும் உடல் கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்தப்பகுதியில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரே பகுதியில் நிலத்தகராறு காரணமாக உறவினர்களுக்கிடையே இரட்டைக்கொலை  நடைபெற்ற சம்பவம் காரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையிலான போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via