ஒன்றரை வயது குழந்தையை கொன்று தின்ற ஓநாய்

by Staff / 20-01-2023 12:26:16pm
ஒன்றரை வயது குழந்தையை கொன்று தின்ற ஓநாய்

ஒன்றரை வயது சிறுமியை ஓநாய் கொன்று தின்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சந்தீப் குமார் என்பவரின் குடும்பம் மஹர்வா காவல் நிலைய எல்லையில் உள்ளது. இரவு உணவு முடிந்து வெளியில் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுமி ப்ரீத்தியை ஓநாய் வாயில் கவ்விச் சென்றது. குழந்தை காணாமல் பரிதவித்த பெற்றோர், கிராம மக்கள் உதவியுடன் தேடினர். கிராமத்திற்கு வெளியே காட்டுப்பகுதியில் ஓநாய் குழந்தையை கடித்துக்கொன்று தின்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via