16 வயது சிறுமியுடன் குடும்ப நடத்திய காதலன் கைது

by Staff / 21-01-2023 02:23:29pm
16 வயது சிறுமியுடன் குடும்ப நடத்திய காதலன் கைது

திருத்தணி செருக்கனூரை சேர்ந்தவர் விவசாயி கிருபாகரன் (45), மனைவி அமுலு (37). தம்பதிகளுக்கு (16) வயதில் ஒரு மகள் உள்ளார். அமுலு திருத்தணி மகளிர் போலீசில் மகளை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் அந்த சிறுமியுடன் சுக்ரியன் (26) என்ற பைக் மெக்கானிக் குடும்ப நடத்தி வந்துள்ளார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.காணாமல் போன சிறுமிக்கு அமுலுவின் தம்பி மேகநாதன் (30) என்ற நபருக்கு கடந்த வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். மேகநாதன் சிறுமியுடன் வாழாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை காதலித்து வந்த, சுக்ரியன் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று சென்னையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இந்த சம்பவத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தையும், காதலன் சுக்ரியனும் போக்சோ வழக்கில் கைதாகினர். புகார் கொடுத்த சிறுமியின் தாய் அமுலு மற்றும் கணவன் மேகநாதன் ஆகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். சிறுமி திருத்தணி அருகில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

 

Tags :

Share via