ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்த டி.டி.ஆர்
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌசி ரயில் நிலையத்தில் ஒரு பெண் ரயிலுக்காகக் காத்திருந்தார். அவருக்கு டிக்கெட் பரிசோதகர் ராஜு சிங்குடன் பழக்கம் ஏற்பட்டது. பிரயாக்ராஜ் செல்லும் ரயிலின் ஏசி கோச்சில் அந்த பெண்ணை ராஜூ சிங் அமரச் செய்துள்ளார். ஓடும் ரயிலில் மற்றொரு நபருடன் சேர்ந்து ராஜூசிங் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் இம்மாதம் 16ஆம் தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் டிடிஇ ராஜு சிங்கை crpபோலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Tags :